வெவ்வேறு இடங்களில்கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்
- கடந்த 6-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
- உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வெள்ளகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் எழத்தக்கிரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 6-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காததால் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் கிருஷ்ணகிரி லட்சுமிபுரம் பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி செண்பகம் (வயது19
கடந்த பிப்ரவரி 15-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.