உள்ளூர் செய்திகள்
தருமபுரி குமாரசாமிபேட்டையில் அ.தி.மு.க.வின் 51-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு கொடி ஏற்று விழா
- குமாரசாமி பேட்டையில் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தருமபுரி.
அ.தி.மு.க.வின் 51 -வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு இன்று தருமபுரி குமாரசாமி பேட்டையில் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு நகரச் செயலாளர் பூக்கடை ரவி தலைமை வகித்தார். ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் முன்னிலை வகித்தார்.
தருமபுரி மாவட்ட செயலாளரும், முன்னாள் உயர்கல்வி அமைச்சருமான கே.பி.அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.