உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது

Published On 2023-08-09 15:45 IST   |   Update On 2023-08-09 15:45:00 IST
  • இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய, தருமபுரி மாவட்ட எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட கலெக்டர் சாந்தி யிடம் பரிந்துரை செய்தார்.
  • இதற்கு மாவட்ட கலெக்டர் குண்டர் சட்டத்தில் இருவரையும் அடைக்க உத்தரவிட்டார்.

தருமபுரி,

தருமபுரி பஸ் நிலையம் வழியாக கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக, தருமபுரி மாவட்ட மது விலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு கடந்த மாதம் 2-ம் தேதி தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து, மது விலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் கவிதா, தலைமையிலான போலீசார் பஸ் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டி ருந்தனர்.

அன்று இரவு சந்தேகத்து க்கு இடமாக கையில் பையுடன் நின்றிருந்த 2 நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர்களிடம் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (33), ரமேஷ் (39) என்பது தெரிய வந்தது.

இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் சதீஷ்குமார் மீது ஏற்கனவே, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், சங்ககிரி போலீஸ் நிலையத்தில் ஓரு அடி, தடி வழக்கும் பதிவாகி இருப்பது தெரியவந்தது.

அதே போல, ரமேஷ் மீது ஆந்திரா மாநிலத்தில் ஒரு கஞ்சா வழக்கு பதிவாகி இருப்பதும் தெரியவந்தது.

எனவே, இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய, தருமபுரி மாவட்ட எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட கலெக்டர் சாந்தி யிடம் பரிந்துரை செய்தார்.

இதற்கு மாவட்ட கலெக்டர் குண்டர் சட்டத்தில் இருவரையும் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதற்கான ஆணை சேலம் மத்திய சிறை அதிகாரி களிடம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News