உள்ளூர் செய்திகள்

150 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு

Published On 2023-08-24 09:12 GMT   |   Update On 2023-08-24 09:12 GMT
  • கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • பஸ் இயக்க த்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

விழுப்புரம்:

வார இறுதி நாளினை முன்னிட்டு, வருகிற 26-ந் தேதி அன்று மக்கள் அவரவர் சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை ஏற்பாடு செய்திடவும்,பஸ் இயக்க த்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News