உள்ளூர் செய்திகள்

வாக்கு எண்ணும் மையம் அமைய உள்ள இடத்தில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

Published On 2023-11-08 06:48 GMT   |   Update On 2023-11-08 06:48 GMT
  • சிதம்பரம் மக்களவை தொகுதிவாக்கு எண்ணும் மையம் அமைய உள்ள இடத்தில் அரியலூர் கலெக்டர் ஆய்வு
  • தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரி யில் அமைக்கப்படும்.

அரியலூர், 

சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரி யில் அமைக்கப்படும்.

இங்கு சிதம்பரம் மக்கள வைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங் கொண்டம், குன்னம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில்மற்றும் சிதம்பரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்களை கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கவுள்ள பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணப்படவுள்ள மையங்கள், தேர்தல்மேற் பார்வையாளர்கள் அறைகள், ஊடக மையம் ஆகியவை அமையவுள்ள இடங்களையும், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள்ஏற்படுத்துவது குறித்தும் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பெரோஸ்கான் அப்துல்லா, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், உடையார்பா ளையம் வட்டாட்சியர் கலிலூர் ரகுமான், தேர்தல்பிரிவு வட்டாட்சியர் வேல்முருகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசி, அக்கல்லூரி தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News