உள்ளூர் செய்திகள்

வாலிபர் போக்சோவில் கைது

Published On 2022-10-25 11:55 IST   |   Update On 2022-10-25 11:56:00 IST
  • வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
  • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காலனி தெருவை சேர்ந்தவர் தீபன்ராஜ்(வயது 19). இவர், 13 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் தீபன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News