உள்ளூர் செய்திகள்
சட்ட விரோதமாக மது விற்ற வாலிபர் கைது
- சட்ட விரோதமாக மது விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
- அவரிடம் இருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயராமபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆறுமுகம்(27). கிளிமங்கலம் ஓடை அருகே உள்ள குறவர் கொட்டகையில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.