உள்ளூர் செய்திகள்

உலக கல்லீரல் தின விழிப்புணர்வு வாகன பேரணி

Published On 2022-07-29 15:17 IST   |   Update On 2022-07-29 15:17:00 IST
  • உலக கல்லீரல் தின விழிப்புணர்வு வாகன பேரணி நடந்தது
  • கிராமம் தோறும் வாகனங்களில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக கல்லீரல் அலட்சிய தின விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் மஞ்சள் காமாலை உள்ளதா என பரிசோதித்தல். பணியாளர்கள் அனைவருக்கும் மஞ்சள்காமாலை தடுப்பூசி போடுதல். நடமாடும் மருத்துவக்குழு மூலம் பரிசோதித்தல் மற்றும் விழிப்புணர்வு வழங்கல். மருத்துவ நிலையங்களிலும் கிராமங்களிலும் மஞ்சள்காமாலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல். கிராமம் தோறும் வாகனங்களில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன், மருத்துவ அலுவலர் பார்த்திபன் தலைமை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர், கிராம சுகாதார செவிலியர்கள், கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News