உள்ளூர் செய்திகள்

உலக தாய்ப்பால் வார விழா

Published On 2022-08-10 08:09 GMT   |   Update On 2022-08-10 08:09 GMT
  • உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது
  • ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் நடந்தது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனை மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் வனிதா ராவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதன் அவசியம், நன்மைகள் ஆகியன குறித்து பேசினர்.

ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் ராணி, இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் வடிவேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்த்துறை உதவிப்பேராசரியர் பவானி வரவேற்றார். முடிவில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவர் தலைவர் கனிெமாழி நன்றி கூறினார். 

Tags:    

Similar News