உள்ளூர் செய்திகள்
- தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இரண்டு மகள்கள் உள்ளனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள அகரம் மேல தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 42). கூலித்தொழிலாளியான இவருக்கு மேனகா என்ற மனைவியும், ஜெயசூர்யா என்ற மகனும், ஜோதிகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தனிமையில் இருந்த முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."