உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்ற ெபண் கைது

Published On 2022-10-15 12:19 IST   |   Update On 2022-10-15 12:19:00 IST
  • சாராயம் விற்ற ெபண் கைது செய்யப்பட்டார்
  • காவல்துறைக்கு தகவல் வந்தது.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ள–ச்சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் தலைமை–யில் தா. பழூர்போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்ப–ட்டனர்.

அப்போது சீனிவாசபுரம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் விற்பதாக தகவல் வந்தது. தகவலின் பேரில்காவல் உதவி ஆய்வாளர்ராஜா தலைமை–யிலான காவ–ல்துறை––யினர் சம்பவ இடத்தி–ற்கு சென்று திடீர் சோதனை மேற்கொ–ண்டனர்.

அப்போது வீட்டின் பின்புறம் வைக்கோலில் 7 லிட்டர் கள்ளச்சாராயம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு பிடித்து அதை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சல்பா (33) என்ற பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News