உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2022-08-01 09:42 GMT   |   Update On 2022-08-01 09:42 GMT
  • விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
  • தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழவண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி செல்வி (வயது 42). இவருக்கு கடந்த சில மாதங்களாகவே தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கான சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் வயிற்று வலி அதிகமானதால் விஷம் குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News