உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து மனைவி தற்கொலை

Published On 2023-02-08 10:29 GMT   |   Update On 2023-02-08 10:29 GMT
  • விஷம் குடித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
  • கணவர் இறந்த துக்கத்தில் இருந்த உமா சம்பவத்தன்று களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்

அரியலூர்:

பெரம்பலூர் மாவட்டம், சில்லக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன்(வயது 43). இவரது மூத்த மகள் உமா(18). இவர் தந்தையின் எதிர்ப்பையும் மீறி அதே கிராமத்தை சேர்ந்த வேலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு வேலு பூச்சி மருந்து(விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த உமாவை, அரியலூர் மாவட்டம், மல்லூர் கிராமத்தில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு மதியழகன் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த உமா, சம்பவத்தன்று களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News