உள்ளூர் செய்திகள்

அரியலூரில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் கைது

Published On 2022-08-07 09:20 GMT   |   Update On 2022-08-07 09:20 GMT
  • அரியலூரைச் சேர்ந்தவர் முத்துவேல் (45). விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலாளர்.
  • முத்துவேல் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பிற மதங்களை இழிவுபடுத்துதல், மத மோதல்களை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் அரியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அரியலூர் :

அரியலூரைச் சேர்ந்தவர் முத்துவேல் (45). விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலாளரான இவர், தனது முகநூல் பக்கத்தில், பிற மத கடவுளை தவறாக சித்தரித்து, இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும் விதமாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளதாக அரியலூர் கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமார், அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், முத்துவேல் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பிற மதங்களை இழிவுபடுத்துதல், மத மோதல்களை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் அரியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News