உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
- ஜெயங்கொண்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
- நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்.
ஜெயங்கொண்டம்:
தமிழகம் முழுவதும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அறந்தாங்கி மற்றும் ஜெயங்கொண்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஜெயங்கொண்டம் அங்கராயநல்லூர் பகுதியில் 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார். கோட்ட பொறியாளர் உத்தண்டி, ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தன.சேகர், உதவி கோட்ட பொறியாளர் பி.கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், உதவி பொறியாளர் விக்னேஷ்ராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகானந்தம், கண்காணிப்பாளர் செந்தில், சாலை ஆய்வாளர்கள் கவிதா, சுமத்ரா, சுஜாதா, மரியசூசை,ஒன்றிய அவைத்தலைவர் குணசேகரன், கிளைக் கழக செயலாளர்கள், கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.