உள்ளூர் செய்திகள்

கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம்

Published On 2022-08-30 08:21 GMT   |   Update On 2022-08-30 08:21 GMT
  • கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
  • கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் காலனி தெருவை சேர்ந்த முனுசாமியின் மகன் கோகுல்ராஜ்(வயது 32). கடந்த ஜூலை மாதம் கோகுல்ராஜ் மற்றும் சிலர் கஞ்சா வியாபாரம் செய்தபோது போலீசார் வருவதை கண்டதும் தப்பி ஓடினர். இதில் கோகுல்ராஜ் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து கோகுல்ராைஜ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து கோகுல்ராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதன்படி அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறையில் உள்ள கோகுல்ராஜிடம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News