உள்ளூர் செய்திகள்

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்

Published On 2023-07-12 11:46 IST   |   Update On 2023-07-12 11:46:00 IST
  • நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
  • இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தைச் சேர்ந்த அம்சவிருத்தன் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்சவிருத்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அம்சவிருத்தனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் அவரின் மனைவி விஜயலட்சுமியின் தந்தை மற்றும் சகோதரரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அம்சவிருத்தனின் உறவினர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News