உள்ளூர் செய்திகள்

சொத்து தகராறில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Published On 2022-08-20 15:25 IST   |   Update On 2022-08-20 15:25:00 IST
  • சொத்து தகராறில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
  • முன்விரோதம் இருந்து வந்தது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தை சேர்ந்தவர் தன்ராஜ் மகன் சிவசங்கர். அதே பகுதியில் வசிக்கும் அவரது பெரியப்பா ராமு என்பவருடைய மகன் ராமகிருஷ்ணன்(வயது 41). இவர்கள் இருவருக்கும் இடையில் சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக உடையார்பாளையம் கோட்டாட்சியரிடம் மனு செய்து, மூன்று முறை கோட்டாட்சியர் முன்பு ஆஜராகி விசாரணை நடைபெற்றது. இதன்பிறகு சிவசங்கரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் சம்பவத்தன்று இரவு சிவசங்கரையும், அவரது சித்தப்பா மற்றும் சித்தப்பாவின் மகன்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து கேட்ட சிவசங்கரை, ராமகிருஷ்ணன் தனது வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து கைகளால் தள்ளி வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்ததையடுத்து, கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிவசங்கர் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் ராமகிருஷ்ணன் மீது சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

Tags:    

Similar News