உள்ளூர் செய்திகள்

வாக்காளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அமைச்சர்

Published On 2022-07-06 14:48 IST   |   Update On 2022-07-06 14:48:00 IST
  • வாக்காளர்களை சந்தித்து குறைகளை அமைச்சர் கேட்டறிந்தார்.
  • பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

அரியலூா் :

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டத்துக்கு உட்பட்ட வாக்காளா்களை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் குறைகளைக் கேட்டறிந்தாா். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். எஸ் சிவசங்கா், போக்குவரத்துத் துறை அமைச்சா் பொறுப்பேற்றாா். இந்நிலையில், செந்துறை வட்டத்துக்கு உட்பட்ட நாகல்குழி, கீழமாளிகை, பரணம், இரும்புலிக்குறிச்சி ஆகிய கிராமங்களில் வாக்காளா்களைச் சந்தித்து நன்றி கூறினாா். தொடா்ந்து, பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

Tags:    

Similar News