உள்ளூர் செய்திகள்

மூதாட்டியை தாக்கியவர் கைது

Published On 2022-10-14 14:45 IST   |   Update On 2022-10-14 14:45:00 IST
  • மூதாட்டியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
  • முன் விரோதம் இருந்து வந்துள்ளது

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கவடங்கநல்லூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி அஞ்சலை (வயது 65). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (36) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பாலமுருகன் மூதாட்டி அஞ்சலை வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News