உள்ளூர் செய்திகள்

டிரைவர் தீக்குளித்து தற்கொலை

Published On 2022-08-30 13:54 IST   |   Update On 2022-08-30 13:54:00 IST
  • டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிமுருகன்(வயது 38). இவர் தனியார் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால், குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து மனம் உடைந்த அவர் திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News