உள்ளூர் செய்திகள்

தா.பழூரில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2022-07-10 15:12 IST   |   Update On 2022-07-10 15:12:00 IST
  • ரமேஷ் ர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
  • ரமேஷ் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மகன் ரமேஷ் (வயது23). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் மது குடிக்க தனது மனைவிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுத்ததால் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News