உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு கூட்டம்

Published On 2022-09-25 06:38 GMT   |   Update On 2022-09-25 06:38 GMT
  • அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்ஊராட்சி ஒன்றிய தெற்கு பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடை பெற்றது.
  • இதில்100 மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்ஊராட்சி ஒன்றிய தெற்கு பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் அரியலூர் வருவாய் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் உடையார்பாளையம் கல்வி மாவட்ட செயலாளருமான பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தேர்தல் ஆணையாளராக வட்டார தலைவர் தேர்தல் ஆணையாளர் பிரபாகரன், வட்டார பொருளாளர் இணை ஆணையாளர் ராஜ்குமார் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்தனர்.

இதில் வட்டத் தலைவராக ஆறுமுகமும், செயலாளராக அரங்கநாதனும், பொருளாளராக பாலசுப்பிரமணியனும், மகளிர் அணி செயலாளராக செல்வியும், துணை தலைவர்களாக சரண்சிங், ராமலிங்கம், உமா, துணை செயலாளராக ராஜேந்திரன், சேரன் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில்100 மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News