உள்ளூர் செய்திகள்
கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கரும்பாயிரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கரும்புகளை கையில் ஏந்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கரும்பு டன் ஒன்றுக்கு 10.25 பிளி திறனுக்கு ரூ.3,150 கொடுத்து வருகின்றனர். இதனை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட கரும்புகளுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.