உள்ளூர் செய்திகள்

ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர்கள் அதிகம் நாட்டம் செலுத்த வேண்டும்-அரியலூர் புத்தக திருவிழாவில் தொல். திருமாவளவன் பேச்சு

Published On 2023-04-29 06:30 GMT   |   Update On 2023-04-29 06:30 GMT
  • ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர்கள் அதிகம் நாட்டம் செலுத்த வேண்டும் என அரியலூர் புத்தக திருவிழாவில் தொல். திருமாவளவன் பேசினார்
  • படிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு எங்கிருந்தாலும் புத்தககம் வீடு தேடி வரும்

அரியலூர்:

அரியலூரில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவின் 6-நாம் நாளான இன்று தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,தமிழக மக்கள், இளைஞர்களிடையே படிக்கும் வேட்கை உருவாகியுள்ளன என்பதை இந்த புத்தகத்திருவிழா உணர்த்துகிறது.ஆகையால் தான் நாவல்கள், சிறுகதைகள் என ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நாள்தோறும் வெளியாகி கொண்டிருக்கிறது. அறிவியல், ஆராய்ச்சி படிப்புகளில் அதிகம் நாட்டம் செலுத்த வேண்டும்.

படிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு எங்கிருந்தாலும் புத்தககம் வீடு தேடி வரும். படிக்க வேண்டும் என்ற ஈடுபாடு அனைவருக்கும் வேண்டும். புத்தகங்களை படிப்பதால் வீடு மட்டுமன்றி, நாடும் வளர்ச்சி அடையும்.பள்ளிகளில் பாடபுத்தகங்கள் வரையறுக்கப்படுகின்றன. இதற்காக வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்படுகின்றன. பள்ளியில் இதனை தேர்வு செய்து பயிலும் மாணவர்கள் தற்போது அதிகம் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தான் இந்த மாற்றம் உள்ளது. முன்பெல்லாம் படிப்பு என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளாதது.

அப்போது, பெற்றோருக்கும் அந்த உந்துதல் இல்லை. படிக்காமல் இருக்கின்றோமே என்ற எண்ணம் ஏற்படவும் இல்லை.ஆனால், தற்போது பள்ளி செல்லவில்லை என்றால் மதிப்பு இல்லை. பாடத்திட்டங்களை தாண்டி படிக்கும் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடையலாம். பாடத்திட்டங்களை தாண்டி படித்தவர்கள் பெரும் சாதனைகளை படைத்துள்ளனர். அந்த காலக்கட்டத்தில் கலாச்சாரம் எவ்வாறு இருந்தது என்பதை எல்லாம் உணர வரலாறு புத்தகங்களை அனைவரும் படிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News