உள்ளூர் செய்திகள்

கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2022-10-02 14:55 IST   |   Update On 2022-10-02 14:55:00 IST
  • அரியலூர் மாவட்டம் கல்லக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
  • பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் கல்லக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி புரட்டாசி 2-வது சனிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலியுக வரதராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News