உள்ளூர் செய்திகள்

முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

Published On 2023-09-07 09:54 GMT   |   Update On 2023-09-07 09:54 GMT
  • முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
  • ஆடி கிருத்திகையையொட்டி

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் ஆடி கார்த்திகையையொட்டி வில்லேந்தி வேலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள்பாலித்தார்.

Tags:    

Similar News