உள்ளூர் செய்திகள்

மணல் கடத்தியவர் கைது

Published On 2023-07-16 13:37 IST   |   Update On 2023-07-16 13:37:00 IST
  • மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
  • மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்

அரியலூர்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அவர் விக்கிரமங்கலம் போலீசாருக்கு புகார் தெரிவித்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற மாட்டுவண்டியை தடுத்து நிறுத்தினர். விசாரணையில் கொள்ளிடம் ஆற்று படுகை பகுதிகளில் இருந்து முத்துவாஞ்சேரி பகுதிகளுக்கு மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News