உள்ளூர் செய்திகள்

திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு

Published On 2023-07-05 11:55 IST   |   Update On 2023-07-05 11:55:00 IST
  • திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கபடும்
  • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரியலூர்:

அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உலக திருக்குறள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கிராமங்கள் மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் திருக்குறள் பெயர் பலகை வைப்பது, கூட்டமைப்பை வலுவப்படுத்துவது, சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் வழியில் நடத்துவது, 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பத்தாயிரம் பரிசு வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் நாகமுத்து தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலர் சௌந்தர்ராஜன்,மண்டலத் தலைவர் சின்னதுரை, மாவட்டத் தலைவர் இளங்கோ, துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அரசு வழக்குரைஞருமான சாந்தி, ஒருங்கிணைப்பாளர் செல்லபாண்டியன், துணைச் செயலர் செவ்வேல், கொள்கை பரப்புச் செயலர் பொய்யாமொழி, பெரம்பலூர் மாவட்ட நிர்வாக அமைப்பாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

Tags:    

Similar News