அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை
- கல்லக்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை
- கம்யூனிஸ்ட் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், கல்லக்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் பூங்கோதையிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.அக்கட்சி நிர்வாகிகள் மொ.மணி, ஆர்.பெரியசாமி, பசுபதி, சுந்தரமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் த.தண்டபாணி ஆகியோர் அளித்த மனுவில், கருப்பி லாக்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட கல்லக்குடி கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், இங்குள்ள மக்கள் சிகிச்சைக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்லவேண்டிய நிலை உள்ளது. ஆகவே மக்களின் நலன் கருதி இக்கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். மேலும் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும். பள்லி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். ஏரி வரத்து வாய்க்கால் கரையை பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.