உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் குண்டும் குழியுமான சாலைகள் சீரமைப்பு பணி

Published On 2022-08-01 09:49 GMT   |   Update On 2022-08-01 09:49 GMT
  • ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் குண்டும் குழியுமான சாலைகள் சீரமைப்பு பணி நடைபெற்றன
  • கண்ணன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாக பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக தூரிய நடவடிக்கை எடுக்கும் விதமாக

8-வது வார்டு ராஜகொல்லை தெருவில், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவங்கி வைத்தார்.

உடன் நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், நகராட்சி துணைத் தலைவரும், திமுக நகர கழக செயலாளருமான வெ.கொ.கருணாநி, நகர் மன்ற உறுப்பினர்கள் எஸ்.ராஜமாணிக்கம் பிள்ளை, வார்டு கழக செயலாளர் மருதை.விஜயன், வீர.புகழேந்தி வாசு மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News