உள்ளூர் செய்திகள்

திருமானூரில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

Published On 2022-09-13 06:51 GMT   |   Update On 2022-09-13 06:51 GMT
  • திருமானூரில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  • மின்உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான திருமானூர், ஏலாக்குறிச்சி, தூத்தூர், குருவாடி, மேலராமநல்லூர், திருமழபாடி, இலந்தை கூடம் அரண்மனைகுறிச்சி, சாத்தமங்களம் ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருமானூர் மின்உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News