உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம், தா.பழூர் பகுதிகளில் நாளை மின்தடை

Published On 2023-02-03 06:40 GMT   |   Update On 2023-02-03 06:40 GMT
  • ஜெயங்கொண்டம், தா.பழூர், பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
  • பராமரிப்பு பணி நடைபெறுவதால்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம் மற்றும் தழுதாழைமேடு ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், குருவாலப்பர்கோயில், பிச்சனூர், ஆமணக்கந்தோண்டி, வாரியங்காவல், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, மதனத்தூர், ஸ்ரீபுரந்தான், வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைகட்டு, ஆயுதகளம், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையார், த.மேலூர், த.பொட்டக்கொல்லை, மணகெதி, துளாரங்குறிச்சி, சூரியமணல், தழுதாழைமேடு, குழவடையான், வீரசோழபுரம், வளவனேரி, பிள்ளைபாளையம், கங்கைகொண்டசோழபுரம், இளையபெருமாள்நல்லூர், மெய்க்காவல்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News