உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் பா.ம.க. சார்பில் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு கூட்டம்

Published On 2022-06-24 09:13 GMT   |   Update On 2022-06-24 09:51 GMT
  • பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள் மூலம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு கூட்டம் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமையில் சமூக நீதிப் பேரவை தலைவர் பா.ம.க. வழக்கறிஞர் பாலு முன்னிலையில் நடைபெற்றது.
  • இதில் அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள நபர்களை அழைத்து மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தனர்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள் மூலம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு கூட்டம் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமையில் சமூக நீதிப் பேரவை தலைவர் பா.ம.க. வழக்கறிஞர் பாலு முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தலைமை அலுவலகத்தில் இருந்து வருகை தந்த மாநில தேர்தல் பணிக் குழு இணை செயலாளர் இசக்கி, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பேராசிரியர் செல்வகுமார், தர்மபுரி மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், சென்னை ராயபுரம் பசுமைத்தாயக அமைப்பு செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு நிர்வாகிகளை நேர்முக தேர்வு நடத்தினர்.

இதில் அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள நபர்களை அழைத்து மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தனர். மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News