உள்ளூர் செய்திகள்
- 285 மனுக்கள் பெறப்பட்டன
- மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கலெக்டர் உத்தரவிட்டார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 285 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்கலைவாணி, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஈஸ்வரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்ட அலுலவர்முருகண்ணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.