உள்ளூர் செய்திகள்

ஆண்டிமடம் அருகே தண்ணீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-06-18 11:42 IST   |   Update On 2023-06-18 11:42:00 IST
  • ஆண்டிமடம் அருகே தண்ணீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
  • தெரு விளக்குகள் எரியாமல் இரவு நேரங்களில் இருண்டு கிடப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் வரதராஜன் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பொதுமக்களுக்கு குடிதண்ணீர் சரியான முறையில் வரவில்லை, தொடர்ந்து மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு வருவதாகவும், துப்புரவு பணியாளர்கள் இல்லை என்றும், தெரு விளக்குகள் எரியாமல் இரவு நேரங்களில் இருண்டு கிடப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய அடிப்படை பிரச்சனைகளை முன்வைத்து அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் பேரூராட்சி தலைவர் மார்க்ரேட் எலிசபெத் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News