உள்ளூர் செய்திகள்

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பட்டா முகாம்

Published On 2023-11-19 11:24 IST   |   Update On 2023-11-19 11:24:00 IST
  • வரு வாய் மற்றும் பேரிடர் மே லாண்மைத் துறை சார்பில் சிறப்பு பட்டா முகாம் நடைபெற்றது.
  • முகாமில், பொது மக்களிடமிருந்து 1706 மனுக்கள் பெறப்பட்டு இதில் 9 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

அரியலூர்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூர் ,உடையார்பா ளையம் வரு வாய் கோட்டங்களில் வரு வாய் மற்றும் பேரிடர் மே லாண்மைத் துறை சார்பில் சிறப்பு பட்டா முகாம் நடைபெற்றது.

அரியலூர் கோட்டாட்சி யர் அலுவல கத்தில் நடை பெற்ற முகாமில், பொது மக்களிடமிருந்து பல்வேறு பட்டாக்கள் தொடர்பான 802 மனுக்கள் பெறப்பட்டு, இதில் 36 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதே போல் உடையார்பா ளையம் வருவாய் கோட்ட த்துக்கான முகாம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

முகாமில், பொது மக்களிடமிருந்து 1706 மனுக்கள் பெறப்பட்டு இதில் 9 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இந்த இருமுகாம்களை பார்வையிட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, தீர்வுக் காணப்பட்ட நபர்க ளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளை வழங்கினார்.

இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர்கள் அரி யலூர் ராமகிருஷ்ணன், உடையார்பாளையம் பரிம ளம் மற்றும் தாசில்தார்கள், வருவாய்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News