உள்ளூர் செய்திகள்

ஏரியில் குளிக்க சென்ற முதியவர் கீழே தவறி விழுந்து பலி

Published On 2022-08-11 14:49 IST   |   Update On 2022-08-11 14:49:00 IST
  • ஏரியில் குளிக்க சென்ற முதியவர் கீழே தவறி விழுந்து பலியானார்.
  • சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் பரிதாபமாக இறந்தார்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 70). இவர் அருகே உள்ள நயினார் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்."

Tags:    

Similar News