உள்ளூர் செய்திகள்

அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் பலி

Published On 2023-09-17 14:40 IST   |   Update On 2023-09-17 14:40:00 IST
  • தா.பழூர் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் பலியானார்
  • தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அரியலூர்,

அரியலூர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அமிர்தராயன்கோட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 65). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் தனது அண்ணன் மகன் ராஜ்குமார் (45) வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் ராதாகிருஷ்ணன் ஒரே நேரத்தில் 30 மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உறவினர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் அழகப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News