உள்ளூர் செய்திகள்

அரியலூரில் 13ம் தேதி மறியல் போராட்ட அறிவிப்பு

Published On 2023-09-02 07:04 GMT   |   Update On 2023-09-02 07:04 GMT
  • அரியலூரில் மத்திய அரசைக் கண்டித்து 13-ம்தேதி மறியல் நடைபெறும் என்று ஏ.ஐ.டி.யு.சி. அறிவித்து உள்ளது
  • மறியலில் கலந்து கொள்ள பொதுச்செயலாளர் தண்டபாணி அழைப்பு விடுத்துள்ளார்

அரியலூர்,

அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏஐடியுசி சங்கத்தின் பொதுச் செயலர் த.தண்டபாணி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, மத்திய அரசின் பல திட்டங்களில் ரூ.7.5 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக இந்திய அரசு கணக்கு தணிக்கை துறை மக்களவையில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யதுள்ளது. மேலும் பங்கு வர்த்தகத்தில் பிரதமர் மோடியின் நெருங்கிய கூட்டாளியான அதானி குழுமம் பல லட்சம் கோடி ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. இது போன்ற மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து வரும் அரியலூரில் வரும் 13-ம் தேதி நடைபெறும் மறியல் போராட்டம் நடைபெறும். இதில பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் ரெ.நல்லுச்சாமி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் ப.ராஜதுரை, துணைச் செயலர் ந. கோவிந்தசாமி, பொருளாளர் கு.வெள்ளையம்மாள், கயர்லாபாத் கிளை நிர்வாகி து.ராஜா, கல்லக்குடி கிளை நிர்வாகிகள் ஆ.பெரியசாமி, கு.வனிதா, பானுமதி, சாந்தி, முருகேசன், எருத்துக்காரன்பாட்டி கிளை மருதமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News