- இயற்கை வளம் பாதுகாப்பு தின விழா அரியலூர் பள்ளியில் நடைபெற்றது.
- விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில், இயற்கை வளம் பாதுகாப்பு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.விழாவுக்கு அக்கல்வி நிலையத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் பெ .செüந்தரராஜன் முன்னிலை வகித்து பேசுகையில், இயற்கையை பாதுகாப்பது என்பது ஒவ்வொரு உயிர்களின் கடமையாகும். இயற்கையோடு இணைந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும். வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கையை பேண வேண்டும் .இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என இயற்கையோடு வாழும் வாழ்க்கை ஆரோக்கியமானதாக இருக்கும். இதுவே காலத்தின் தேவைப்பாடாகும். அனைவரும் ஒன்றிணைந்து இயற்கையை பாதுகாத்து வளம் பெறுவோம் என்றார்.விழாவில் விழிப்புணர்வுப் போட்டிகளி வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளிச் செயலர் புகழேந்தி வரவேற்றார்.