உள்ளூர் செய்திகள்
- அரியலூரில் படை பத்து மாரியம்மன் கோயில் பால்குட திருவிழா நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசம்
அரியலூர்,
அரியலூர் மேலத்தெருவில் உள்ள படைபத்து மாரியம்மன் கோயிலில், ஆடிபால்குட விழா நடைபெற்றது. விழாவையொட்டி, அரியலூர் பேருந்து நிலையம்அருகேயுள்ள செட்டிஏரி விநாயகர் கோயிலிலிருந்து பால்குடம், அக்னி சட்டிஎடுத்த வந்த பக்தர்கள், முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலைஅடைந்தனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்குஅபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டுபக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள்பங்கேற்று பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.