மனநல நாள் தின விழிப்புணர்வு பேரணி
- அரியலூரில் உலக மனநல நாள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- மாணவ,மாணவிகள் மனநலம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அட்டையை ஏந்திவாறு, முழக்கமிட்டுச் சென்றனர்
அரியலூர்,
உலக மனநல நாள் தினத்தையொட்டி அரியலூரில் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மனநலத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கல்லூரியின் முதல்வர் முத்துகிருஷ்ணன், விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பேரணியானது ராஜாஜி நகர், கல்லூரிச் சாலை, செந்துறை சாலை வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. பேரணியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், மருத்துவர்கள் கண்மணி, அறிவுச்செல்வன், மருத்துவ அலுவலர் குழந்தைவேல், மனநோய் மருத்துவப் பிரிவு உதவி பேராசிரியர்கள் செந்தில்குமார், அகமதுநிஷா, உடற்கூறு ஆய்வியல் துறை துணைப் பேராசிரியர் நெடுஞ்செழியன், சமூக மருத்துவத் துறை உதவிப் பேராசிரியர் வினோத்குமார் மற்றும் அக்கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு மனநலம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அட்டையை ஏந்திவாறு, முழக்கமிட்டுச் சென்றனர்.