உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் குழந்தைகள் ஆரோக்கியம் குறித்த மருத்துவ முகாம்

Published On 2022-06-15 12:14 IST   |   Update On 2022-06-15 12:14:00 IST
  • ஜெயங்கொண்டத்தில் குழந்தைகள் ஆரோக்கியம் குறித்த மருத்துவ முகாம் நடை பெற்றது.
  • மருத்துவர் உமா தலைமையில் குழந்தைகள் ஊட்டச்சத்துகுறைபாடு உள்ளதா மேலும் குழந்தைகளுக்கு எடை குறித்து மருத்துவ பரிசோதனை செய்தனர்.


அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் குறித்து மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் மீன்சுருட்டி நடமாடும் மருத்துவமனை அரசு சமுதாய சுகாதார நிலையம் சார்பாக ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் உள்ளஅங்கன்வாடிமையங்களில் மருத்துவர் உமா தலைமையில் குழந்தைகள் ஊட்டச்சத்துகுறைபாடு உள்ளதா மேலும் குழந்தைகளுக்கு எடை குறித்து மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதில் ஜெயங்கொண்டத்தில் உள்ள அடி பள்ளம் தெரு நாச்சியார் அம்மன் கோவில் தெரு செங்குந்தபுரம் வடக்கு தெற்கு உள்ளிட்ட மையங்களில் குழந்தைகளுக்கு பரிசோதனை முகாம் நடை பெற்று வருகிறது.




Tags:    

Similar News