உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே எம்.சி.சி. நுண்ணுயிர் உரமாக்கல் மையத்தில் மாணவர்கள் கள ஆய்வு

Published On 2023-06-23 12:20 IST   |   Update On 2023-06-23 12:20:00 IST
  • ஜெயங்கொண்டம் அருகே எம்.சி.சி. நுண்ணுயிர் உரமாக்கல் மையத்தில் மாணவர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர்
  • தூய்மை பணியாளர்கள் காய்கறி கழிவு, பழத்தோல், பூக்கழிவுகள் ஆகியவற்றைக்கொண்டு இயற்கை உரம் தயாரிப்பதை விளக்கி செய்து காட்டினர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் பரப்ரஹ்மம் பவுண்டேசன் சார்பில் செங்குந்தபுரம் எம்.சி.சி. நுண்ணுயிர் உரமாக்கல் மையத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் நகராட்சி மேலாளர் அன்புசெல்வி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள் ரமேஷ், மணிகண்டன், உமாதேவி, கலையரசி, ரேகா, ஜோதி, அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் காய்கறி கழிவு, பழத்தோல், பூக்கழிவுகள், முட்டை ஓடு, காய்ந்த ஓடுகள் ஆகியவற்றைக்கொண்டு இயற்கை உரம் தயாரிப்பதை விளக்கி செய்து காட்டினர்.

மேலும் வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிக்கலாம் என்றும், மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான குப்பை, சுகாதார கழிவுகள் போன்றவற்றை வீட்டிலேயே பிரித்து வைத்து தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்றனர். இந்நிகழ்வில் பரப்ரஹ்மம் பவுண்டேஷன் மற்றும் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முத்துக்குமரன், பள்ளி முதல்வர் தனலட்சுமி, துணை முதல்வர் தாரணி, நர்சிங் கல்லூரி ஆசிரியர் பாரதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முன்னதாக களப்பணி உதவியாளர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் குணா நன்றி கூறினார்.

Tags:    

Similar News