உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2023-07-12 12:07 IST   |   Update On 2023-07-12 12:07:00 IST
  • லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • அவரிடம் இருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் ரூ.500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது

அரியலூர் :

அரியலூரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் அரியலூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நீதிமன்றம் அருகே வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டு இருந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் சிட்டிபாபு தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 49) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் ரூ.500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் ேகார்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயங்கொண்டம் சிறையில் அடைக்கப்பட்டார்.



Tags:    

Similar News