உள்ளூர் செய்திகள்

லாரி டிரைவர் விபத்தில் பலி

Published On 2023-09-20 12:25 IST   |   Update On 2023-09-20 12:25:00 IST
  • சுண்ணாம்பு கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி டிரைவர் விபத்தில் பலி யானார்
  • முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் மோதி விபத்து

அரியலூர்,

திருச்சி மாவட்டம் ஆலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீதாராமன்(வயது 50), லாரி டிரைவரான இவர் டிப்பர் லாரியில் சுண்ணாம்பு கற்களை ஏற்றிக்கொண்டு திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது மேலப்பழுவூர் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரியின் டிரைவர் திடீரென பிரேக் அடித்தால் சீதாராமன் ஓட்டி சென்ற லாரி அந்த லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் சீதாராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News