உள்ளூர் செய்திகள்

அரியலூர்அரசு மருத்துவக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

Published On 2023-07-08 12:23 IST   |   Update On 2023-07-08 12:23:00 IST
  • அரியலூர்அரசு மருத்துவக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைடபெற்றது
  • முகாமுக்கு மாவட்ட முதன்மை குற்றவியில் நீதித்துறை நடுவர் சரவணன் தலைமை வகித்தார்

அரியலூர்,

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை அனிதா கலைய ரங்கில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் கேலி வதை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்பு ணர்வு முகாம் நடை பெற்றது. முகாமுக்கு மாவட்ட முதன்மை குற்றவியில் நீதித்துறை நடுவர் பி. சரவணன் தலைமை வகித்து, முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில் இந்தியா முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தியாவிலேயே குறிப்பாக தமிழ்நாட்டில் தான் கேலி வதைச் சட்டம் அமல்ப டுத்தப்பட்டது. கேலிவதைச் செய்தது தெரியவந்தால் அவர்கள் சட்ட மூலம் கடு மையாக தண்டிக்க ப்படுவா ர்கள். எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் சகோத ரத்துடன் பழக வேண்டும் என்றார்.

மருத்துவக் கல்லூரி துணை முதன்மையர் சிவா, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ரமேஷ், மருத்துவ அலுவலர் குழந்தைவேலு ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். வழக்குரைஞர் சங்கத் தலைவர் மனோகரன், மாவட்ட காவல்துறையின் சட்ட ஆலோசகர் வழ க்குரைஞர் பகுத்தறிவாளன் மற்றும் வழக்குரைஞர் சவரி ஆனந்தம் ஆகியோர் கலந்துகொண்டு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக முதுநிலை குடிமையியல் மருத்துவர் டி.கண்மணி வரவேற்றார். முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர் வெள்ளைச்சாமி நன்றி தெரிவித்தார்.


Tags:    

Similar News