உள்ளூர் செய்திகள்

காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-09-06 08:10 GMT   |   Update On 2022-09-06 08:10 GMT
  • காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
  • 2-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது

அரியலூர்:'

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற உக்கிர மகா காளியம்மன் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்காக ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர். அதன்படி கடந்த 2-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று கோவில் கலசத்திற்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினர். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் உக்கிர மகா காளியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர் மற்றும் கருப்புசாமி கோவிலுக்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோடாலிகருப்பூர் பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோடாலிகருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்."

Tags:    

Similar News