உள்ளூர் செய்திகள்
கழுமலைநாதர்கோவிலில் சுந்நரருக்கு குருபூஜை விழா
- ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோவிலில் சுந்நரருக்கு குருபூஜை விழா
- 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி உடனுறை கழுமலைநாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று நாயன்மார்களில் நால்வர்களான அப்பர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையுடன் சுந்தரர் மூர்த்தி குரு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திருவாசகம் பாடல்களை பாடி கோவில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து வழிபட்டனர்.